அன்பர்களே!
நம் தமிழ்நாடு உருவாகி ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்து கொண்டாடும் நேரத்தில் இதை தெரிந்துக் கொள்ளலாமே! :-)
தமிழுக்கு இலக்கணம் கூறும்போது தமிழ் வழங்கிவரும் நிலப்பகுதிகளை கூறுவார்கள். இருப்பினும் அவைகள் சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு, கொங்குநாடு என்று பிரிந்தே இருந்தன. இவையாவற்றிலும் தமிழ் வழங்கி வந்தாலும் யாரும் "தமிழ்நாடு" என்றுஅழைக்கவில்லை.
அக்காலத்தில் எந்த நாட்டவன் என்றால்? தாங்கள் சார்ந்த நாட்டைக்சேர்த்து சேர நாட்டவன் என்றோ அல்லது சோழ நாட்டவன் என்றோ தான் கூறுவர்.
முதன்முதலில் "தமிழ்நாடு" என்று பொதுமைப்பட குறிப்பிடுகிறது " நேமிநாதம்" என்ற இலக்கண நூல். கி.பி. 11ஆம் நூற்றாண்டில் "குணவீர பண்டிதர்" என்ற ஜைனமுனிவரால் எழுதப்பட்டது.
அன்புடன்,
இரா.பானுகுமார்,
சென்னை.
5 comments:
அன்புள்ள பானுகுமார்,
இதுவரை உங்கள் மடல்களை அகத்தியரில் (I am a hibernating member there) படித்து வந்தேன். இனி உங்கள் வலைப்பூவிலும் படிப்பேன்.
நிதானமாகக் கூறப்படும் ஆழ்ந்த கருத்துக்களுக்கு பாராட்டுக்கள்.
ரெ.கா.
சமணம் அறிந்து கொள்ள ஆவல்
தொடர்ந்து எழுதுங்கள் ஐயா.
அய்யா இத்தனை நாளாக நான் இந்து மதத்தில் இருந்துவந்தேன். ஆனால் தற்பொழுது சிவன் கோயில்கள் முன்பு சமணக்கோயில் என்று உணர்ந்தேன். போலி மதத்தில் இருப்பது எனக்கு பிடிக்கவில்லை. சமணம் மாற உள்ளேன். தங்கள் ஆலோசனை தேவை.
நான் அராய்ந்ததில் சென்னை திருசூலம் கோயில், திருவான்மியூர் கோயில் முன்பு சமணம் என்பதை அறிந்தேன். 18 சித்தர்களும் சமணர்கள் தான்.
அய்யா இத்தனை நாளாக நான் இந்து மதத்தில் இருந்துவந்தேன். ஆனால் தற்பொழுது சிவன் கோயில்கள் முன்பு சமணக்கோயில் என்று உணர்ந்தேன். போலி மதத்தில் இருப்பது எனக்கு பிடிக்கவில்லை. சமணம் மாற உள்ளேன். தங்கள் ஆலோசனை தேவை.
நான் அராய்ந்ததில் சென்னை திருசூலம் கோயில், திருவான்மியூர் கோயில் முன்பு சமணம் என்பதை அறிந்தேன். 18 சித்தர்களும் சமணர்கள் தான்.
திரு எச் ஆர் ஐயா,
தங்கள் மனம் திறந்த கருத்துக்கு நன்றி. உபதேசம் என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
ஏன் மதம் மாறவேண்டும்?
தாங்கள் சார்ந்த மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை வையுங்கள். போலி மூட நம்பிக்கையை விலக்குங்கள். உண்மையாக இருங்கள். பிறருக்கு உதவுங்கள். புலால் உணவை முற்றாக நிறுத்துங்கள். எல்லா ஜீவராசிகளையும் நேசியுங்கள். அறம் செய்ய மறவாதீர்கள். இவைகளைக் கடைப்பிடித்தாலே நீங்கள் எந்த மதத்தில் இருந்தாலும் "சமணனாய்" வாழலாம்.
யானும் முழு சமணன் இல்லை. சமணன் என்றால் முயற்சியாளன் என்று பொருள். சமணனாக முயற்சித்து வருகின்ற ஒரு ஆன்மா!
அறத்தினை மறவாதீர்கள். அறம் ஒன்றே நம்மை உய்விக்கும். "அறம் செய்ய விரும்பு" :-)
இரா.பானுகுமர்,
சென்னை.
Post a Comment